சென்னை,டிச.22- சென்னை விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட், 5 முதல் 17 வயது வரையி லான பள்ளி மாணவர்க ளுக்கான ஓவியப் போட்டியை வெவ்வேறு தலைப்புகளின் கீழ் சனிக்கிழமை நடத்தியது. இந்த ஓவியப்போட்டி சிறு குழந்தைகளின் மனதில் கைவினைப் பணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, கலைத்துறையில் பங்கேற்க குழந்தைகளை ஊக்கு விக்கும் நோக்கில் நடை பெற்றது. இதில் சென்னை முழுவதும் இருந்து சுமார் 500 பள்ளி மாணவர்கள் பங்கேற்று போட்டியில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர் இப்போட்டி 5 வயது முதல் 9 வயது, 10-13 வயது மற்றும் 14 - 17 வயது ஆகிய மூன்று பிரிவுகளில் நடை பெற்றது. இதில் முதல் மூன்று சிறந்த ஓவிங்களை தேர்ந்தெடுத்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டன. அரசு நுண்கலைக் கல்லூரி யின் ஓவியப் பேராசிரியர் கே.புகழேந்தி வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த விழா விற்கு நீதிபதி பி.சண்முகம் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியில் விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட்-ன் தலைமை நிர்வாக அதி காரி கே.சுவாதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.