மெட்ரோ, ரயில், பஸ் ஒரே டிக்கெட்
சென்னை,மார்ச் 1- சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் அறிமுகம் செய்யப் படுகிறது. இதற்காக, தனி யாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரியுள்ளது.
இந்த செயலியில் க்யூஆர் கோடு மூலம் அனைத்து பொது போக்கு வரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம்.
வேகத்தடையால் உயிரிழப்பு
தாம்பரம்,மார்ச் 1- தாம்பரம் அடுத்த சிட்ல பாக்கத்தைச்சேர்ந்த கோவிந்தராஜ் (வயது36). கூலித்தொழிலாளி. சேலம் சேர்ந்த இவர் மனைவி சந்தோஷம் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். புதன் இரவு அவர் தனது 2 மகன்களுடன் மோட்டார் சைக்கி ளில் சிட்லபாக்கம் சர்வம் மங்கலம் நகர்பகுதியில் சென்றார். அப்போது அங்கு புதியதாக அமைக்கப் பட்டுள்ள வேகத் தடையில் சென்றபோது நிலை தடு மாறி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி கீழே விழுந்தார். மகன்கள் கண் எதிரிலேயே கோவிந்தராஜ் இறந்தார்.
தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது: மாணவர்கள் கருத்து
சென்னை, மார்ச் 1- 12ஆம் வகுப்பு மாண வர்களுக்கான மொழிப்பாட தேர்வு முடிந்த நிலையில், வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். கடந்த மாதம் 12ஆம் தேதி பனிரண்டாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் தொடங்கப்பட்டு 17ஆம் தேதி வரை நடைபெற்றன.
இதையடுத்து 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 மாணவர்கள் எழுதுகின்ற னர். இவர்களில் 3,58,201 பேர் மாணவர்கள். 4,13,998 பேர் மாணவியர், மூன்றாம் பாலி னத்தவர் ஒருவர்.
இவர்கள் தவிர தனித்தேர்வர்கள் 21,875 பேரும் எழுது கின்றனர். இதையடுத்து திட்ட மிட்டபடி முதல் தேர்வான மொழிப்பாடத்தேர்வு திங்களன்று (மார்ச் 1) தொடங்கி முடிவடைந் துள்ளது. இந்நிலையில் மொழிப்பாடத் தேர்வு வினாத்தாள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வினாக்கள் எது வும் வெளியிலிருந்து கேட்கப்படவில்லை என்றும்,எல்லா வினாக் களும் புத்தக வினாக்கள் தான் எனவும் மாணவர்கள் தெரிவித்தனர்.