விருத்தாசலத்தில் நடைபெற்ற 14-வது மாநில அளவிலான சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகளில் வீனஸ் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்றனர். வெற்றி பெற்றவர்களையும் இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பள்ளியின் சேர்மன் வீனஸ் குமார், பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார். அப்போது பள்ளியின் முதல்வர் ராதிகா உடனிருந்தார்.