சென்னை, ஜூலை 26 - சென்னையில் பதின்பருவ கர்ப் பிணிகள் அதிகரித்து வருவதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவ மனைகளில் மாதர் சங்கத்தினர் ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த்த ஜகடேவிடம் சங்கத்தின் மாவட்ட நிர்வா கிகள் எஸ்.சரவணசெல்வி, ம.சித்ர கலா, ஜெ.ஜூலியட் (தென்சென்னை), கோட்டீஸ்வரி, பாக்கியலட்சுமி, விமலா எம்.சி., (வடசென்னை), ஏ.சாந்தி (மத்திய சென்னை) உள்ளிட்டோர் மனு அளித்தனர். இந்த மனுவின் சுருக்கம் வருமாறு: மருத்துவமனைகளுக்கு தினசரி 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வருகிறார்கள். அதற்கேற்ப மருத்து வர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் இல்லை. சின்ன ஸ்டான்லி மருத்துவமனை தவிர பிற இடங்களில் பிற்பகலுக்கு பிறகு மருத்துவர்கள் இருப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட அளவை விட செவிலியர்களும் ஊழி யர்களும் 50 விழுக்காட்டிற்கும் குறை வாகவே உள்ளனர். பரிசோதனை கருவிகள், அறுவை சிகிச்சை அரங்குகள் முறையாக பயன்படுத்தாததால் தூசிபடிந்து கிடக்கிறது. அவசரகால மருந்துகள் பற்றாக்குறை உள்ளது. சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதிகள் இல்லை. சிறப்பு மருத்துவர்கள் இல்லாத நிலை உள்ளது. சைதாப்பேட்டை மகப்பேறு மருத்துவமனையில் ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார். மருத்துவமனைகளுக்கு காவலா ளிகளை நியமிக்க வேண்டும். சைதாப் பேட்டை மகப்பேறு மருத்துவமனை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருவொற்றியூர் மகப்பேறு மருத்துவமனைக்கு நுழைவாயில் அமைக்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், சிறப்பு மருத்து வர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை நியமிக்க வேண்டும். தலைமை மருத்துவமனை களில் அனைத்து வகையான பரிசோத னைகளையும் உறுதி செய்ய வேண்டும். 18 வயதுக்கு குறைவான குழந்தை கர்ப்பிணிகள் வருவதாகவும், வயதை அதிகமாக கூறி பதிவு செய்து பிரசவம் பார்ப்பதாகவும் மகப்பேறு மருத்து வர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, பெண்கள் அமைப்புகளை இணைத்து குழந்தை கருத்தரிப்பை தடுக்க விழிப் புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.