tamilnadu

img

புதுவை பேரவைத் தலைவராக சிவக்கொழுந்து பதவி ஏற்பு

புதுச்சேரி, ஜூன் 3-புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் பதவிக்கு வி.பி.சிவக்கொழுந்து மட்டுமே மனு செய்திருந்தார். இதனையடுத்து அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், புதுச்சேரி சட்டப் பேரவை திங்களன்று கூடியதும் அரசு கொறடாவும்  காங்கிரஸ் உறுப்பினருமான அனந்தராமன் பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து சபையை நடத்தினார். அப்போது பேரவைத் தலைவராக சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டதை முறைப்படி அறிவித்தார். பின்னர் புதிய பேரவைத் தலைவர் சிவக் கொழுந்துவை அறிமுகம் செய்து வைத்து பேசினார். பேரவைக்குள் வந்த பேரவைத் தலைவர் சிவக்கொழுந்தை முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம், திமுக உறுப்பினரும், தெற்கு மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் அழைத்துச் சென்று பேரவைத் தலைவர் இருக்கையில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

புறக்கணிப்பு

இக்கூட்டத் தொடரில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் பேரவை கூட்டத்தை புறக்கணித்தனர். அதேபோல் முதல்வரின் பாராளுமன்றச் செயலர் லட்சுமிநாராயணனும் பேரவை கூட்டத்தில் பங்கேற்றவில்லை என குறிப்பிடத்தக்கது.