tamilnadu

முன்கூட்டியே விடுவிக்க கோரிய 7 பேர் மனு வழக்கு தள்ளுபடி

 சென்னை, ஆக.29- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 பேரை முன்விடுதலை செய்யக்கோரி, நளினி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று ஆயுள் கைதிகளாக உள்ள பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை விடு விக்கக் கோரி, கடந்த பிப்ரவரி யில் அரசுக்கு நளினி மனு அனுப்பி னார். அந்த மனுவை பரிசீலித்து, தங்களை முன்கூட்டியே விடு தலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார். நீதிபதிகள் சுப்பையா மற்றும்  சரவணன் அமர்வில் நடை பெற்று வந்த இந்த வழக்கு விசா ரணையின் போது, 7 பேர் விடு தலை தொடர்பாக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் தமிழக அரசு கேட்டறிய வேண்டும் என நளினி தரப்பில் வாதிடப்பட்டது. முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதை உரி மையாக மனுதாரர் கோர முடி யாது எனவும், அது அரசின் தனிப்  பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது எனவும் தமிழக அரசின் பதில் வாதத்தில் தெரிவிக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 361-ன் படி, தமிழக அரசு  அனுப்பிய தீர்மானத்தின் மீதான  நடவடிக்கை குறித்து ஆளுநரி டம் விளக்கம் கேட்க முடியாது எனவும், ஆளுநருக்கு இதற்கான சட்ட பாதுகாப்பு உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்தது. 7  பேர் விடுதலை விவகாரம் ஆளுந ரின் பரிசீலனையில் உள்ளதாக வும் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் நிறை வடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த 20ஆம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் வியாழனன்று(ஆக.29) தீர்ப்ப ளித்த நீதிபதிகள் ஏழு பேரை முன்  விடுதலை கோரிய மனுவை  தள்ளுபடி செய்து உத்தரவிட்ட னர்.