திருவண்ணாமலை, ஜூன் 30- தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் 9 ஆவது மாநில மாநாடு செப்.25, 26 ஆகிய தேதிகளில் திருவண்ணா மலையில் நடைபெற உள்ளது. ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு, போக்குவரத்து மற்றும் சகோதர சங்கங்கள் ஒருங்கிணைந்த வரவேற்பு குழு கூட்டம், திருவண்ணாமலை சிஐடியு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைவர் எம்.சந்திரசேகரன், தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் தங்க அன்பழகன் வரவேற்றார். கவுரவத் தலை வர் வெ. மன்னார், ஒளிக்கதிர் ஆசிரியர் கணேசன், மாநிலத் தலைவர் எஸ். எஸ். சுப்பிரமணியன், பொது செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் பங்கேற்றனர். வரவேற்பு குழு தலைவராக வெ. மன்னார், செயலாளராக கே.நீதிமாணிக்கம், பொருளாளராக எம்.சந்திரசேகரன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.