செந்தில் பாலாஜியின் வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரும் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் வழக்கின் அனைத்து கோப்புகளையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கே மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி மீதான வழக்கைச் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதே தவறு என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.