tamilnadu

img

மூத்த பத்திரிகையாளர் ராஜன்  காலமானார்

சென்னை:
சட்டமன்றப் பேரவை முன்னாள் தலைவர் மறைந்த கா. காளிமுத்துவின் உதவியாளரும், மூத்த பத்திரி கையாளருமான ‘காகிதம்’ ராஜன் செவ்வாயன்று (ஜூலை 14) மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 64.மூத்த பத்திரிகையாளர் ராஜன், உசிலம் பட்டி வட்டம் கோடநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனர். மதுரை மலர் என்கிற புத்தகத்தையும் வெளியிட்டு வந்த அவர் சட்டப்பேரவை முன்னாள் தலைவர் கா.காளிமுத்துவின் தனி உதவியாளராக பணியாற்றினார். நமது எம்ஜிஆர், மக்கள் குரல், தமிழ்ச்சுடர் உள்ளிட்ட தினசரிகளில் பணியாற்றினார்.தற்போது மாலை தமிழகம் நாளேட்டின் நிருபராக பணியாற்றி வந்த நிலையில் காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் தாம்பரம் மாயனத்தில் தகனம் செய்யப்பட்டது.

;