“முஸ்லிம்கள் சொத்து சேர்ப்பதற்கு காங்கிரஸ் உதவி செய்திருந்தால், இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்கள் எல்லாம் பணக்காரர்களாகி இருப்பார்கள். அதானி, அம்பானி எல்லாம் இன்றைக்கு வந்தவர்கள். அதற்கு முன்னால் இருந்தவர்கள் டாடா, பிர்லாதான். இந்த 4 கோடீஸ்வரர்களைத் தாண்டி இந்தியாவில் பெரிய பணக்காரர்கள் இல்லை. அப்படிப் பார்த்தால் இந்த 4 பேரில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லையே? ” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.