tamilnadu

போலி டோனர்கள் பறிமுதல்

சென்னை:
அறிவுச் சொத்துரிமை மீறல் தடுப்பு பிரிவினர் தமிழகத்தில் அடிக்கடி திடீர் சோதனை நடத்தி தகவல் தொழில்நுட்பம் மற்றும்  கணினி பொருட்கள் சார்ந்த போலி தயாரிப்புகளை பறிமுதல் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை நகரில் 100 அடி சாலையில் நான்கு கடைகளில் பிரபல கெனான் நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த டோனர்களை சமீபத்தில் பறிமுதல் செய்தனர். இந்திய அறிவுச் சொத்துரிமை மீறல் தொடர்பான பிரிவின் ஆய்வாளர் லதா தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.