நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த மகத்தான வெற்றியை அளித்த மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கூட்டணி கட்சியினர் மகிழ்ந்தனர். இதில் நாகை மாவட்டம் தரங்கம்படி அருகே செம்பனார்கோவிலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அதில் திமுக ஒன்றிய செயலாளர் பி.எம்.அன்பு தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் உள்ளிட்டோர்.