திருச்சிராப்பள்ளி, ஆக. 4 -
நாம் தமிழர் கட்சி சீமான், பொதுமேடையில் மிகவும் தரந் தாழ்ந்து பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அந்த வகையில், “நான் யாரிடம் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறேன். எங்கே சிறுநீர் கழிக்கிறேன் என்பதை எல்லாம் நோட்டமிட்டு அதனை வெளியிடுவது தான் ஐபிஎஸ் படித்த வர்களுக்கு வேலையா? உன் வேலையா அது. எங்களது கட்சிக்குள் ஒருவரை பிசுறு என்போம். பின்னர், அவரையே உசுரு என்போம்.
இதில் உனக்கு என்ன வந்தது” என போலீசாரை அண்மையில் தரக்குறை வாக பேசினார்.
காவல்துறையினரை தரக்குறைவாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சீமானின் இது போன்ற தரக்குறைவான பேச்சை எல்லாம் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று டுவிட்டரிலும் அவர் பதிவிட்டுள்ளார்.