செங்கல்பட்டு, நவ. 27- வடகிழக்கு பருவமழை தீவிரம் ஃபெங்கல் புயல் கரையைநெருங்கும் நிலையில் 10 அடி உயரம் வரை கடல் சீற்றம் மீனவர்களின் படகுகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் தற்போது 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது இதன் காரணமாக கடல் அலை சுமார் 8 அடி முதல் 10 அடி வரை எழும்புவதால் மீனவர்கள் தங்களது படகுகள் மற்றும் வலைகளை மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மாமல்லபுரம் மீனவர் பகுதியில் படகுகளை வைக்க இடம் இல்லாத காரணத்தினால் கோயில்கள் தெருக்களில் கிடைத்த இடத்தில் எல்லாம் படகுகளை பாதுகாப்பாகநிறுத்தி வருகின்றனர் மேலும் புயல் கரையைக் கடக்கும் என்ற நிலையில் சூளெரிக்காடு பட்டிபுலம் தேவனேரி, கோகிலா மேடு, உய்யாலி குப்பம், புதுப்பட்டினம் உள்ளிட்ட 44 கிராம மீனவர்கள் தங்களது படகுகளை மற்றும் வலைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்து வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக மீன் பிடிக்க செல்லாத நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து புயல் கரையை கடக்கும் என்ற நிலையில் தற்போது மீனவர்கள் தங்களது பொருட்களை பாதுகாப்பாக வைத்து வருகின்றனர்.