சென்னை, ஜூலை 1- பள்ளிச் சீருடை தைத்து தரும் பணியினை தனியாருக்கு கொடுக் கும் திட்டத்தை கைவிட்டு, கூட்டு றவு சங்கம் மூலம் தையல் தொழி லில் ஈடுபட்டு வரும் பெண்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சம்மேளனம் (சிஐ டியு) கோரிக்கை விடுத்துள்ளது.
சமூக நலம் மற்றும் மகளிர் உரி மைத்துறை அமைச்சர் பெ. கீதா ஜீவனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி அவர்கள் தலைமையில் தையல் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. சுந்தரம், பொதுச் செய லாளர் எம். ஐடா ஹெலன், துணைத் தலைவர் எஸ்.டி. ராஜேந்திரன், சம்மேளனகுழு உறுப்பினர் எம். ஆனந்த் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது, தங்களின் கோரிக் கைகள் அடங்கிய மனுவை அமைச் சரிடம் வழங்கினர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது: தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டத் தின் படி, சமூக நலத்துறையின் கீழ் பள்ளி மாணவ - மாணவியருக்கு சீருடை தைக்கும் பணியை தமிழ கத்திலுள்ள 99 மகளிர் தையல் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களு டைய வாழ்வாதாரத்தை பாதிக் கின்ற வகையில் பள்ளிக் கல்வித் துறையும், தமிழ்நாடு அரசும் பள்ளிச் சீருடை தைக்கும் பணியை தனியாருக்கு கொடுப்பதற்கு திட்ட மிட்டு சில மாவட்டங்களில் நடை முறைபடுத்தப்பட்டது.
இதனால் பள்ளிச் சீருடை தைக்கும் ஒரு லட் சத்திற்கும் மேற்பட்ட ஏழை - எளிய பெண்கள் தங்களது வாழ்வாதா ரத்தை இழக்க நேரிடும். மகளிர் நலனை பாதுகாக்க பல்வேறு நலத் திட்டங்களை அமலாக்கி வரும் தமிழ்நாடு அரசு, பள்ளிச் சீருடை தைத்து தரும் பணியினை தனி யாருக்கு கொடுக்கும் திட்டத்தை கைவிட்டு தையல் தொழிலில் ஈடு பட்டு வரும் பெண்களின் வாழ்வா தாரத்தை பாதுகாத்திட கோரு கின்றோம். தையல் கூட்டுறவு சங்க உறுப்பி னர்களுக்கு பள்ளிச் சீருடை தைப்ப தற்கான தையல் கூலியை இன் றைய விலைவாசியை கவனத்தில் கொண்டு ஆண்டுக்கு 10 சதவிகிதம் உயர்த்தி வழங்கிட உரிய நடவ டிக்கை எடுத்திட கோருகின்றோம்.
பள்ளிகளுக்கு, குழந்தைளை அளவெடுக்கச் சென்று வருவ தற்கான பயணச்செலவு, உண வுச்செலவு உள்ளிட்ட செலவுகள் இருப்பதை கவனத்தில் கொண்டு அளவெடுக்கும் கூலியை 4 ரூபாயி லிருந்து ரூ. 10 - ஆக உயர்த்தி வழங்கிட கோருகின்றோம். அரசால் வழங்கப்படும் அனைத்து வகைத் துணிகளையும் தையல் கூட்டுறவு சங்கம் மூல மாக தைத்து கொடுக்கும் பணி யினை தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்கி பெண் களுக்கான வேலை வாய்ப்பை உறுதிப்படுத்திட கோருகின்றோம். அனைத்து தையல் கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர் களை சேர்த்திட உரிய கால அவ காசம் வழங்கிட கோருகின்றோம். தையல் கூட்டுறவு சங்க உறுப்பி னர்கள் அனைவருக்கும் அடை யாள அட்டை வழங்கிட கோரு கின்றோம் இவ்வாறு அறிக்கையில் குறிப் பிட்டுள்ளனர்.