tamilnadu

களப்பணியாளர்கள் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண நிதி வழங்கத் திட்டம்

சென்னை, ஜூலை 29- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, கொரோனா தடை உத்தரவு காலத்தில் வாழ்வாதார நிதியாக ஆயிரம் ரூபாய் வழங்கும்  திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய அடையாள அட்டை (நீல நிற அட்டை) வைத்தி ருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆயிரம்  ரூபாய் நிவாரண நிதி வழங்க மாநகராட்சி களப்பணி யாளர்கள் மூலம் வார்டு வாரியாக விவரங்கள் சேகரிக்கப்  பட்டு வழங்கப்படுகிறது. எனவே, சென்னை மட்டுமல்லாது, பிற மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் உட்பட களப்பணியாளர்களிடம், நீல நிற தேசிய அடை யாள அட்டை நகல், குடும்ப அட்டை அல்லது ஆதார் அட்டை  நகல் ஆகியவற்றை வழங்கி நிவாரண நிதியை பெறலாம். இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.