சென்னை, நவ.6- “சனாதனம் குறித்து நான் பேசியதில் எதுவும் தவறு கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம். நான் பேசிய வார்த்தைகளை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். எனது கொள்கையைத்தான் நான் பேசி யிருக்கிறேன்” என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிரான கையெ ழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். திங்களன்று (நவ.6) விசிக தலைவர் திருமாவள வனை சென்னை அசோக் நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து, நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து பெற்றார். அப்போது அக்கட்சியின் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியி னர் உடனிருந்தனர்.
பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடத்துவது நாடகம் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருப்பது குறித்து கேட்கப் பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மசோதாவை ஆதரித்து அதிமுக வினரும் சட்டமன்றத்தில் ஆதரித்து கையெழுத்திட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் இருக்கும் போதுதான் இந்த நீட் தேர்வு வந்தது.
நீட் தேர்வு விலக்கு மசோதாவை இரண்டு முறை ஒன்றிய அரசு நிராகரித் ததை அதிமுக மக்களிடத்தில் கூறவே இல்லை. எனவே, இப்போதாவது உண்மையாக இருங்கள். திமுக உண்மையாக போராடிக் கொண்டி ருக்கிறது”என்றார்.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச் சர்கள் பங்கேற்றது தவறு என்றும், காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் பேசியது எதுவும் தவறு கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப் போம். நான் பேசிய வார்த்தைகளை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன்.எதுவாக இருந்தாலும், சட்டப்படி சந்திப்போம்”என்றார்.