tamilnadu

பழிவாங்கும் நடவடிக்கைகளில் சாம்சங் நிர்வாகம் : நாளை உணவைப் புறக்கணிக்கும் தொழிலாளர்கள்

சென்னை, டிச. 17 - போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர் களை துறை ரீதியான இட மாற்றங்கள் செய்வது, மிரட்டுவது போன்ற பழிவாங்கும் நட வடிக்கைகளில் சாம்சங் நிறுவனம் இறங்கி யுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் தாங்க முடியாமல் தொழிலாளி ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதால், நிர்வாகத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து வியாழக்கிழமை (டிச.19) அன்று ஒரு நாள் உணவு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சிஐடியு அறிவித்துள்ளது

இதுகுறித்து சாம்சங் இந்தியா தொழிலாளர்சங்கத்தின் (சிஐடியு) தலைவர் இ. முத்துக்குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:

35 நிர்வாகிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கை

சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் முடிந்து சுமூக சூழ்நிலை ஏற்படும் என்ற எதிர்பார்ப்பின் பின்னணியில் வேலைக்கு சென்ற தொழிலாளர்களை, நிர்வாக மானது தான் ஏற்றுக் கொண்ட உடன்பாட்டிற்கு எதிராக- அவர்கள் மீது பல்வேறு விதமான பழிவாங்கள் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. 35-க்கும் மேற்பட்ட சங்கத்தின் நிர்வாகிகள் உட்பட முன்னணி தோழர் களுக்கு திடீர் இடமாற்றம் மற்றும் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு குற்றப்பத்தி ரிகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நிர்வாகத்தின் ஆதரவு பெற்ற சொம்பு கமிட்டியில் சேருமாறு, தொழிலாளர்களிடம் மணிக்கணக்கில் கவுன்சிலிங் என்ற பெயரில் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் நடவடிக்கை கள் தொடர்கின்றன. நிர்வாகத்தின் வற்புறுத்த லை ஏற்க முடியாத தொழிலாளர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஆதரவு பெற்ற கமிட்டி கள் மூலம் வசைச் சொல்லுக்கும் அச்சுறுத்த லுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

மன உளைச்சலால்  தொழிலாளி தற்கொலை முயற்சி

இந்தச் சூழலில், சுதாகர் என்கிற ஒரு தொழி லாளியை தொடர்ச்சியாக வற்புறுத்தி அவ ருக்கு விருப்பம் இல்லாத பகுதியில் கட்டாய  இடமாற்றம் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய காரணத்தினால் நிர்வாத்தின் கொடுமை தாங்க முடியாமல் அவர் தற் கொலை செய்து கொள்ள அதிக அளவில் மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். தன்னுடைய மரணத்திற்கு நிர்வாகத்தின் அச்சுறுத்தலும் பழிவாங்கல் நடவடிக்கைகளே காரணம் என்றும் தெரிவித்திருக்கிறார். அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு உதவி செய்யவும் அவர் நிலைமை குறித்து கேட்டு அறியவும் முயன்ற பணியில் இருந்த சங்கத்தின் நிர்வாகிகளுக்கு நிர்வாகம் அனு மதி அளிக்கவில்லை. பாதிப்புக்கு உள்ளான தொழிலாளியின் மீது தற்கொலை முயற்சி வழக்கு போடுவோம் என்றும் ‘சாம்சங் இந்தியா’ நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் ஆணவமாக சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்திருக்கின்றனர்.

தொழிலாளர் துறை அலட்சியம்

இந்த கொந்தளிப்பான நிலைமையை உரு வாக்கும் நிர்வாகத்தின் அராஜகத்தை, அமைச்சர்களின் கவனத்திற்கும், தொழிலாளர் துறையின் உயர் அதிகாரிகளுக்கும் எழுத்துப் பூர்வமாகவும் நேரடியாகவும் தொடர்ச்சி யாக எடுத்துரைத்து தலையிட வலியுறுத்தி யும், தலையீடு நேர்மையாகவோ போதுமான தாகவோ இல்லை. நிர்வாகம் தொழிலாளர் துறையை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ள வில்லை.

இந்த பின்னணியில், சாம்சங் நிர்வாகத்தின் அராஜகத்தை எதிர்த்து மீண்டும் போராட்டக் களம் நோக்கிச் செல்வது என்ற அடிப்படையில், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் முதற்கட்டமாக டிசம்பர் 19 அன்று நடத்தும் பகல் உணவு புறக்கணிப்பு போராட்டத்தில் 1500 தொழிலாளர்கள் ஈடுபடுவர்.

நீதிமன்றம் உத்தரவிட்டும்  சங்கப் பதிவு இல்லை

டிசம்பர் 17 அன்று தொழில்துறை தலைமை அலுவலகத்தில், சென்னை கூடுதல் ஆணையர் முன்பு மாலை 5 மணிக்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சங்கத்தின் கோரிக்கையின் மீது பதிலுரை மற்றும் நிர்வாகத்தின் அராஜகத்தை நிறுத்துவதற்கு நிர்வாகம் முன் வராவிட்டால் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களுக்கு செல்வது என்றும் முடிவெடுத்திருக்கிறோம்.

தொழிற்சங்கத்தை பதிவு செய்யும் பிரச்சனையில் 6 வார காலத்திற்குள் முடி வெடுங்கள் என்று உயர்நீதிமன்றம் உத்தர விட்ட பிறகும் தமிழக அரசும் தொழிலாளர் துறையும் இதுவரையிலும் அதுகுறித்து சிறு துரும்பை கூட அசைக்கவில்லை. தொழில் அமைதியை பாதுகாக்க எவ்வளவு தான் நாம் (சிஐடியு) நிதானமாக  சென்றாலும்- நிர்வாகம் ஒருதலைபட்சமாக- தொழிற்சங்கத்தை அழிக்கும் நடவடிக்கையில் பின்வாங்காத நிலையில், அரசும் தன் கடமையை செய்ய முன்வராத போது போராட்டம் தவிர்க்க முடியாததாகி இருக்கிறது.

போராட்டச் சூழலுக்கு  நிர்வாகமும் - அரசுமே காரணம்

போராட்டங்களை நடத்த வேண்டிய சூழலுக்கு அடிப்படைக் காரணங்களாக சாம்சங் நிர்வாகமும், அரசும் இருக்கின்றன என்பதே தற்போதைய நிலை. சாம்சங் தொழி லாளர் பிரச்சனையில் அமைதியா? போராட்டமா? என்பதையும் அவர்களே முடிவு  செய்து கொள்ளட்டும். இவ்வாறு இ. முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.