tamilnadu

img

சாம்சங் தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்க முயற்சி காவல்துறையின் தொழிலாளர் விரோத அணுகுமுறைக்கு சிபிஎம் கண்டனம்!

சென்னை, செப். 16 - ‘சாம்சங்’ தொழிலாளர்களின் கோரிக் கைகளுக்காக போராடிய சிஐடியு மாவட்டச் செயலாளர் இ. முத்துக் குமாரை, தமிழக காவல்துறை சட்ட விரோதமாக கைது செய்து அடைத்து வைத்திருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள் ளது. முத்துக்குமாரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

நிர்வாகத்தின் பிடிவாதம் கண்டனத்திற்கு உரியது!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணி யாற்றும் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். சட்டம் தொழிலாளர் களுக்கு வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில் தங்களுக்கு விருப்ப மான தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கை. ஆனால், சாம்சங் நிர்வா கம் இந்திய சட்டத்தை மதிக்க மாட்டோம் என்று- மத்திய தொழிற்சங்கமான சிஐடியு சங்கத்தை ஏற்க மறுத்து பிடி வாதம் பிடித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.

காவல்துறையின் சந்தேகத்திற்கு உரிய நடவடிக்கைகள்!

இந்நிலையில், திங்களன்று (செப்.16) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்  தலைவர் அலுவலகத்திற்கு தொழிலா ளர்கள் ஊர்வலமாக சென்று தங்களது கோரிக்கை மனுவை அளிப்பது என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்தது மட்டுமல்லாமல், இந்தப் போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வரும் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், சிஐடியு மாவட்டச் செய லாளருமான இ. முத்துக்குமாரை, திங்க ளன்று காலை 7.30 மணிக்கே சிஐடியு அலுவலகத்திலிருந்து கைது செய்து எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்பதையே மாவட்ட நிர்வாகம் மூடி  மறைப்பது பலவிதமான சந்தேகங் களை ஏற்படுத்துகிறது. அவர் காவல் துறையின் கடுமையான தாக்குத லுக்கும், சித்ரவதைக்கும் உள்ளாக்கப் பட்டுள்ளாரோ என்ற சந்தேகம் எழு கிறது. மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோதும் தகவல் தெரிவிக்க மறுக்கின்றனர். அர சின் இந்த அணுகுமுறை தொழிலா ளர் விரோத போக்கையே வெளிப் படுத்துகிறது. இத்தகைய செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.

தொழிலாளர்களை விடுவித்து கோரிக்கைகளை நிறைவேற்றுக!

தமிழ்நாடு அரசு உடனடியாக தலை யிட்டு, முத்துக்குமார் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையி லிருந்து அவரை விடுவிக்க வேண்டும்.  தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையான சங்கம் வைக்கும் உரிமையை அங்கீகரித்து ஏற்பதற்கு சாம்சங் நிறுவனத்தை வலியுறுத்த வேண்டும். மேலும், கைது செய்யப் பட்டுள்ள அனைத்து தொழிலாளர் களையும் விடுதலை செய்வதுடன், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் போன்ற ஜனநாயகப் பூர்வமான இயக்கங் களுக்கு அனுமதி தராமல் மறுக்கும் காவல்துறையின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வற்புறுத்துகிறது.

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.