tamilnadu

img

மாதிரி கிராமசபைக் கூட்டங்கள்

திருவண்ணாமலை, ஆக. 5- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் 3 ஆவது மாநில மாநாடு 15, 16, 17,  ஆகிய  தேதிகளில் தஞ்சாவூரில் நடைபெற உள்ளது.  மாநாட்டை விளக்கியும், சாதியம் குறித்தும், இடஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும், திருவண்ணாமலை மாவட்டத்தில்  மாதிரி கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப் பட்டன. திருவண்ணாமலை ஒன்றியம் நவம்பட்டு இருதயபுரம், போளூர் வட்டம் ஓகூர், கருங் காலிக்குப்பம், சந்தவாசல் உள்ளிட்ட பகுதி களில் கிராம சபைக் கூட்டங்கள் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் ப.செல்வன்,  பொருளாளர் எஸ்.ராமதாஸ், நிர்வாகிகள் டி.கே.வெங்கடேசன், அன்பரசன், ஆரோக்கியமேரி, யேசுராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

;