tamilnadu

img

ஊரக உள்ளாட்சித் தேர்தல்

சென்னை, ஜூலை 30 - தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் விதமாக, தலை மை தேர்தல் அதிகாரியிடம் வாக்கா ளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, மாநில தேர்தல் ஆணைய செயலாளர் கே. பாலசுப்பிர மணியன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “தமிழ்நாட்டில் உள்ள  உள்ளாட்சிகளில் உள்ள காலியிடங் களை நிரப்புவதற்கான தேர்தல்களை விரைவில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது. எனவே, தற்போது உள்ள சட்டப்பேரவை வாக்காளர் பட்டியல் அடிப்படையில், உள்ளாட்சிகளுக்கான வாக்காளர் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் அல்லது தற்செயலாக தேவைப்படும் காலங்களுக்கு தயாரிக்க வேண்டும். 

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1-ம் தேதிகளில் தகுதியான வர்கள் வாக்காளர் பட்டியலில் தற் போது சேர்க்கப்பட்டு வருகின்ற னர். அதற்கேற்ப மக்கள் பிரதிநிதி கள் சட்டத்தில் திருத்தம் செய்யப் பட்டுள்ளது.

எனவே, கடந்த மார்ச் 28 அன்று சட்டப்பேரவை தொகுதி வாரியாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டிய லின் அச்சிடப்பட்ட பிரதிகள் மற்றும் மென் பிரதிகளை வழங்கும்படி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தாங்கள் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

இந்த தரவுகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். மாநில தேர்தல் ஆணையம், உரிய கள ஆய்வுகள் நடத்தி சரிபார்த்து தனது சொந்த தரவு களை உருவாக்கும். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு தகுந்த  நேரத்தில் வெளியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.