tamilnadu

img

கிராமிய கலை நிகழ்ச்சிகள்

கிராமிய கலை நிகழ்ச்சிகள்

ராணிப்பேட்டை, மார்ச் 31 – தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ராஜ ராஜன் தலைமையில் ஞாயிறன்று (மார்ச் 30) தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு கலைச்சங்கமம் கிராமிய கலை நிகழ்ச்சிகள் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. கலை சங்கமத்தில் தமிழர்களின் பாரம்பரிய  கலைகளை போற்றும் வகையில் நலிந்த பாரம்பரிய கலையை முன்னேற்றம் அடைய செய்யும் வகையில் பறையாட்டம், கரகாட்டம், நையாண்டி மேளம், நாதஸ்வரம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம்,  நாட்டுப்புற இசை கலை, சிலம்பாட்டம், பரதநாட்டியம், வாழ்வீழ்ச்சி, சுருளாட்டம் உள்ளிட்ட பல்வேறு விதமான தமிழர்களின் பாரம்பரிய கலைகளை அரங்கேற்றினர். தொடர்ந்து சிலம்பாட்ட பயிற்சியாளர்கள்  தமிழ்செல்வி, கலைச்செல்வி இரு சகோதரிகள் சிலம்பாட்ட பயிற்சி பெறும் மாணவ மாணவிகளுடன் இணைந்து ஆணுக்கு நிகராக கூட்டத்தில் சிலம்பத்தை வீரத்துடனும் விவேகத்துடனும் ஆடியபடி அசத்தி காட்டினர். இந்த நிகழ்ச்சியில் இயல் இசை நாடக மன்றத்தின் குரு கண்ணன், நகர மன்ற துணைத் தலைவர் சீம. ரமேஷ் கருணா, வாலாஜா வட்டாட்சியர் அருள் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.