சென்னை, செப்.5- ஊரகப்பகுதிகளில் 300 கிலோ மீட்டர் தூரத்துக்கு கான்கிரீட் சாலைகள் அமைக்க 95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊரகப்பகுதிகளில் உள்ள குடியிருப்பு தெருக்கள் மற்றும் பாதைகளை கண்ட றிந்து 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு 94 கோடியே 98 லட்சம் ரூபாயில் தரமான கான்கிரீட் சாலைகள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரி வித்திருந்தார். அதன்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதிகளில் தனித்து விடப்பட்ட கிராமங்களை இணைக்கும் வகை யில் பாலம், கழிவு நீர்செல்லும் வடிகால் வசதியுடன் கூடிய கான்கீரிட் சாலைகள் அமைக்கப்படவுள்ளன. அதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கிராமப் பகுதிகளில் வாழும் மக்கள் மழைக்காலங்களில் பாதுகாப்புடன் வாழ வும், விவசாயிகள் தங்கள் பயிர்களை கான்கிரீட் சாலைகளில் உலர வைக்கவும் முடியும் என்று அரசாணையில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்த பணிகளை உடனடி யாக தொடங்கவும் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.