tamilnadu

ஒடிசாவுக்கு ரூ.10 கோடி புயல் நிவாரண நிதி ஒப்படைப்பு

சென்னை, மே 13-பானி புயல் பாதிப்புக்குள் ளான ஒடிசா மாநிலத்துக்கு,10 கோடி ரூபாயை உதவித்தொகையாக தமிழக அரசு வழங்கியுள்ளது.பானி புயலால் ஒடிசா மாநிலம் பெரும் பாதிப்பை சந்தித்த நிலையில், நிவாரணப் பணிகளுக்காக பல்வேறு தரப்பினரும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். பாதிப்புக்குள்ளான ஒடிசா மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு மற்றும் மக்கள் சார்பிலும், தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 10 கோடி ரூபாய் நிவாரண நிதிஉதவியாக வழங்கப்படும் என கடந்த 5 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், முதலமைச்சர் உத்தரவின் பேரில், சென்னையில் உள்ள ஒடிசா பவனின் மேலாளர் ரஞ்சித் குமார் மொஹந்தியை சந்தித்த தமிழக நிதித்துறை கூடுதல் செயலர் க.சண்முகம், 10 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

;