tamilnadu

img

ராக்கெட் ஏவி சென்னை ஐஐடி சாதனை ரூ.300 கோடி முதலீடுகளையும் பெற்றது

சென்னை, ஜூன் 2- நாட்டின் உயர் கல்வி மையங்க ளில் ஒன்றான சென்னை ஐஐடி  (இந்திய தொழில்நுட்ப கல்வி நிலையம்) அண்மையில் ‘அக்னி குல் காஸ்மோஸ்’ என்ற புத்  தொழில் நிறுவனத்தைத் தொடங்கி  அக்னிபன் ராக்கெட்டை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மே 30ஆம் தேதி ஏவியது.  அது 5.6 கிலோ மீட்டர் தூரம் சென்றது.

இந்த ராக்கெட் 3டி பிரிண்டட் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட முதல் ராக்கெட் ஆகும். அடுத்த ஓராண்டுக்குள் அதிக எடை கொண்ட ராக்கெட்டுகள் வாயி லாக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த அக்னிகுல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதனால் விண்வெளித் துறை யில் ஈடுபடும் நிறுவனங்களின் எண்  ணிக்கை அதிகரிக்கும் என  அக்னிகுல் நிறுவன ஆலோசகரான பேராசிரியர் சத்தியநாராயணன் ஆர். சக்கரவர்த்தி தெரிவித்துள்  ளார். மேலும், இந்த நிறுவனத்தில்  பல்வேறு நிறுவனங்கள் ரூ.300  கோடி முதலீடு செய்திருப்பதாக வும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்பதன் மூலம்  நாட்டுக்கு அதிக வருவாய் கிடைக்  கும் என இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

மேலும் வருங்காலத்தில் இந்தி யாவில் இருந்து குறைந்த செல வில் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் போது பல்வேறு வெளிநாட்டு நிறுவ னங்கள் இந்தியாவின் உதவியை  நாடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக இந்தியா விற்கு அதிக வருவாய் கிடைக்கும்  என்று குறிப்பிட்டுள்ள அவர், கடந்த 2020ஆம் ஆண்டு ஹைதராபாத் தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ் பேஸ்’ என்ற புத்தொழில் (ஸ்டார்ட்  அப்) நிறுவனம் ‘விக்ரம் எஸ்’ என்ற  ராக்கெட் ஒன்றை ஏவியதை அவர்  சுட்டிக்காட்டி உள்ளார்.

விண்வெளித் துறையில் ஈடுபட 150க்கும் மேற்பட்ட தனியார் நிறு வனங்கள் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன. இவற்றுள் பல புது தொழில் நிறுவனங்களும் அடங்கும். இந்திய விண்வெளித் துறையின் கீழ் செயல்படும் இன்  ஸ்பேஸ் எனப்படும் இந்திய தேசிய  விண்வெளி ஊக்குவிப்பு, அங்கீ கார மையம் தனியார் நிறுவனங்க ளுக்கு உரிய அங்கீகாரம் அளித்து  ஆலோசனைகள் வழங்கி வருகிறது.