tamilnadu

பண்டிகை, மழை- வெள்ளச் சூழலை பயன்படுத்தி கொள்ளை

சென்னை, அக். 15 - பண்டிகைக்காலம், மழை வெள்ளச்  சூழலை பயன்படுத்தி, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அரசு  தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள் ளது. 

இதுதொடர்பாக, கட்சியின் மாநி லச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடுமையாக உயர்ந்த எண்ணெய் விலை!

பண்டிகைக் காலம் மற்றும் மழை- வெள்ளச் சூழலை பயன்படுத்திக் கொண்டு அத்தியாவசியப் பொருட் களின் விலை கடுமையாக உயர்த்தப் பட்டுள்ளன. நல்லெண்ணெய், சுத்தி கரிக்கப்பட்ட எண்ணெய் விலை 4  நாட்கள் இடைவெளியில் ஒரு லிட்டர்  ரூ. 50 வரை கடுமையாக உயர்த்தப் பட்டுள்ளது. எனவே, இவ்விசயத்தில் உடனடியாக அரசு தலையீடு மேற் கொண்டு விலையேற்றத்தை கட்டுப் படுத்த வேண்டுமென வலியுறுத்து கிறோம்.

பண்டிகைக் காலம் மற்றும் மழை- வெள்ளச் சூழலை பயன்படுத்திக் கொண்டு அத்தியாவசியப் பொருட் களின் விலை கடுமையாக உயர்த்தப் பட்டுள்ளன. நல்லெண்ணெய், சுத்தி கரிக்கப்பட்ட எண்ணெய் விலை 4  நாட்கள் இடைவெளியில் ஒரு லிட்டர்  ரூ. 50 வரை கடுமையாக உயர்த்தப் பட்டுள்ளது. எனவே, இவ்விசயத்தில் உடனடியாக அரசு தலையீடு மேற் கொண்டு விலையேற்றத்தை கட்டுப் படுத்த வேண்டுமென வலியுறுத்து கிறோம்.

காய்கறி விலைகள்  36 சதவிகிதம் உயர்வு

அண்மையில் வெளியான பண வீக்கத் தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் சில்லறை பணவீக்கம் கடந்த 9 மாதங்களில் கடுமையான உயர்வை சந்தித்துள்ளது. 

இதில்  காய்கறிகளின் விலை 36 சதவிகிதம் வரை அதீத உயர்வைக் கொண்டிருப்பதும், தானியங்கள், முட்டை, பருப்பு வகைகள், பழங்கள் என உணவுப் பொருட்களின் விலை சாதாரண மக்கள் வாங்க இயலாத அளவுக்கு உயர்ந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

அரிசி விலை கிலோவுக்கு  ரூ. 10 உயர்வு

சென்னையில், இன்றைய நிலவரப் படி (அக்டோபர் 15) நல்லெண்ணெய் லிட்டர் ரூ. 425, சுத்திகரிக்கப்பட்ட எண் ணெய் லிட்டர் ரூ. 180, பூண்டு கிலோ  ரூ. 450 விலைக்கு விற்பனை செய்யப்படு கிறது. அரிசி வகைகள் கிலோவுக்கு ரூ. 10, பருப்பு வகைகள் கிலோவுக்கு ரூ.20 வரை விலை உயர்த்தி விற்கப் பட்டன. காய்கறிச் சந்தையில் தக்காளி, வெங்காயம் விலை இரண்டு மடங்கு வரை உயர்ந்துள்ளது. பீன்ஸ் கிலோ ரூ. 250, கேரட் ரூ. 200, இஞ்சி ரூ. 180  என விலை உயர்ந்துள்ளன. சில வியா பாரிகள், நெருக்கடியை வாய்ப்பாக பயன்படுத்தி இன்னும் விலையேற்றிக் கொள்ளையடிப்பதையும் பார்க்கிறோம்.

கணினி, மின்சாதனங்களின் விலைகளிலும் உயர்வு

மொத்தவிலைக் குறியீட்டின் அடிப்படையில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாக சொன்னாலும், உணவுப்பொருட்கள், காய்கறிகள், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக இருப்பதை அந்த விபரங்களும் காட்டுகின்றன. பண்டிகைக் காலத்தில் மக்கள் அதிகம் வாங்கும் உணவுப் பொருட்கள் மற்றும் உடைகளின் விலைகள் ஏற்ற மடைந்துள்ளன. கணினி உள்ளிட்ட மின் சாதனப் பொருட்களின் விலையிலும் உயர்வு உள்ளது.

உணவுப்பொருட்களை  ரேசன் மூலம் வழங்குக!

எனவே, கிடுகிடுவென உயரும் விலைவாசியை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட வேண்டும். பெட்ரோல், டீசல்  மற்றும் எரிவாயு உருளை விலைகளை குறைப்பதுடன், எண்ணெய், பருப்பு, காய்கறி போன்ற  அத்தியாவசிய உணவுப் பொருட்களை ரேசன் கடைகள் மூலம் அனைத்து மக்க ளுக்கும் நியாயமான விலையில் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உடை மற்றும் மின் சாதனப் பொருட்களின் விலையில் அசாதாரண உயர்வு ஏதுமில்லாமல் கட்டுப்படுத்த அரசின் தலையீடு அவசியம் என்பதை சி.பி.ஐ (எம்) மாநில செயற்குழுவின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். 

உடை மற்றும் மின் சாதனப் பொருட்களின் விலையில் அசாதாரண உயர்வு ஏதுமில்லாமல் கட்டுப்படுத்த அரசின் தலையீடு அவசியம் என்பதை சி.பி.ஐ (எம்) மாநில செயற்குழுவின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.