சென்னை, ஜூலை 12- சாலையோரங்களில் செயல்படும் பானிபூரி கடைகளுக்கு கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் பெருகி வரும் கையேந்தி பவன் போல சாலையோரங்களில் பானி பூரி கடைகளும் அதிகரித்துள்ளன. சிறிய முதலீட்டில் நடக்கும் இந்த தொழில் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளன. ஒரு வருடத்திற் கான உரிமம் கட்டணமாக ரூ.100 செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். சென்னையில் தற்போது 600 வட மாநிலத்தவருக்குபானிபூரி தொழில் செய்வதற்கான உரிமம் வழங்கப்பட்டன.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை சென்னை மாவட்ட அதிகாரி சதீஷ் குமார் கூறுகையில், சென்னையில் பானிபூரி தயாரித்து விற்பனை செய்வதில் சுகாதாரத்தை பின்பற்றவும், கலப்படம் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.
பழைய எண்ணெய், மீதமுள்ள பழைய உணவுப்பொருட்களை பயன்படுத்தக் கூடாது, சுகாதாரமான முறையில் விற்பது குறித்து மாநகராட்சி அம்மா மாளிகையில் பயிற்சி அளிக்கப்பட்டது. வரும் நாட்களில் வார்டு வாரியாக இந்த பயிற்சி அளித்து உரிமம் வழங்கப்படும். உணவுப்பொருட் கள் விற்பனை செய்வதை முறைப்படுத்தும் நோக்கத்தில் உரிமம் அவசியமாக்கப் பட்டுள்ளது என்றார்.