tamilnadu

img

விடுதியில் தரமற்ற உணவு சட்ட கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

செங்கல்பட்டு, ஆக.8-  புதுப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவியர் விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதை  கண்டித்து மாணவர்கள் வியா ழனன்று (ஆக.8) சாலை மறியலில் ஈடுபட்டனர்  காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தில் சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் கிளை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி விடுதியில் 232 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். விடுதியில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக  கல்லூரி நிர்வாகத்திடம் தொடர்ந்து மாணவிகள் புகார் தெரிவித்து வந்தனர். எனினும், கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில், புதனன்று (ஆக.7)  விடுதியில் உணவு சாப்பிட்டு விட்டு கல்லூரி வந்த மாணவி களில் சிலர் வாந்தி எடுத்தவாறு, மயக்கமடைந்தனவர். பாதிக்கப்பட்ட 25 மாணவிகளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சட்டக் கல்லூரி விடுதியில் தரமான உணவு, சுகாதார மான குடி நீர் வழங்க வேண்டும், கல்லூரி அருகில் ஏடிஎம்  அமைக்க வேண்டும், கல்லூரிக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து, கல்லூரி முன்பு மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.  பின்னர்  மாணவர்களுடன் கல்லூரி துணை முதல்வர் கயல்விழி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இதில் தரமான உணவு, குடி தண்ணீர் உள்ளிட்டவை உடனடியாக வழங்கப்படும் மற்ற கோரிக்கைகள்  அரசு அலுவலர்களுக்கு தெரி விக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் நிருபன் சக்கரவர்த்தி, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தமிழ்பரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்