சென்னை,செப்.25- பாடகர் எஸ்.பி.பி இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நிலைவாக அவர் இல்ல சாலைக்கு அவரது பெயரினை சூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவிற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.