சென்னை, நவ.4- தமிழக அரசு போக்கு வரத்து கழகத்தின் சார்பாக, அரசுப் பேருந்துகளில் வார நாட்களில் முன்பதிவு செய்யும் பயணிகள் 13 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, இதில் 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிர மும், 10 பேருக்கு தலா ரூ.2 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் தொலை தூர பகுதிகளுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் அரசு பஸ்களில் புக்கிங் செய்து பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை அதி கரிக்க பல்வேறு நடவடிக்கை களை அரசு போக்குவரத்து கழகம் எடுத்து வருகிறது. அந்த வகையில், வார நாட் களில் முன்பதிவு செய்யும் பயணிகள் 13 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து 3 பேருக்கு 10 ஆயிரமும், 10 பேருக்கு ரூ.2 ஆயிரமும் பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது.
அந்த வகையில் அக்டோ பர்-2024 மாதத்திற்கு 13 பயணிகளை திங்களன்று, தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா ளர் பணீந்திர ரெட்டி, கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்தார். அதில் முதல் 3 பயணிகளுக்கு தலா ரூ.10,000 ஆயிரம், இதர 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000 ஆயிரம் என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.