tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சென்னை, நவ. 6 - மாமேதை லெனின் தலைமையில், சோவியத் ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க புரட்சி ஏற்பட்டதன் 108- ஆவது ஆண்டு, கம்யூ னிஸ்டுகளால் நவம்பர் 7 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நவம்பர் புரட்சி தின  கொடியேற்று நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநி லக்குழு அலுவலகத்தில் (27 வைத்தியராமன் தெரு, தி. நகர், சென்னை - 600 017) வியாழனன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், கட்சியின் செங்கொடியை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்.

இதேபோல மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் காலை 9.30 மணிக்கு (6/16,  புறவழிச்சாலை, தத்தனேரி, மதுரை - 625018) நடை பெறும் புரட்சி தின நிகழ்ச்சி யில் மாநிலச் செயலாளர் கே.  பாலகிருஷ்ணன் செங்கொடி யை ஏற்றி வைத்து உரை யாற்றுகிறார்.

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி!

புதுதில்லி, நவ. 6 - அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு  டிரம்ப் வெற்றி பெற்றுள்ள தையடுத்து அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது. 

இவ்வாறு டாலர் மதிப்பு  உயர்ந்ததால் இந்திய ரூபா யின் மதிப்பு முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. ஒரு டாலருக்கு இணையான இந்திய ரூபா யின் மதிப்பு 84.25 ஆகக் குறைந்துள்ளது. மெக்சிகன் நாட்டின் பெசோ, ஜப்பா னின் யென் மற்றும் யூரோ  ஆகியவற்றின் மதிப்புகளும் குறைந்தன.

ஏரியில் கூட தாமரை மலரக் கூடாது
அமைச்சர் கிண்டல்

சென்னை, நவ. 6 - சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில்  போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் ஈரநிலை  பசுமை பூங்கா அமைக்கப் பட்டு வருகிறது

இந்தப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே. சேகர்பாபு புதனன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது அங்கு குளத்தில் மலர்ந்திருந்த தாம ரை பூக்களை அகற்ற வலியுறுத்தி அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். 

மேலும் குளத்தில்கூட தாமரை மலரக் கூடாது என கிண்டலாக தெரிவித்தார். இந்த ஆய்வின் போது காரம்பாக்கம் க. கணபதி எம்எல்ஏ மற்றும் அரசு அதி காரிகள் உடன் இருந்தனர்.