சென்னை.டிச.10- தாம்பரம் அருகே உள்ள வரதரா ஜபுரத்தில் நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறி வித்த தமிழக அரசுக்கும், சட்டமன்றத் த்தில் வரதராஜபுரம் மக்களின் குரலை எதிரொலித்த சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகைக்கும் வரதராஜ புரம் நல மன்ற கூட்டமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் வெ.ராஜசேகரன், பொதுச்செயலாளர் டி.சந்தானகிருஷ்ணன் ஆகியோர் விடு த்துள்ள அறிக்கை வருமாறு:
வரதராஜபுரத்தில் உள்ள மக்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத மழை மற்றும் வெள்ள த்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். அதற்கு பிறகு தொடர்ந்து பருவமழை காலங்களில் இப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு ஒருவாரம் வரை குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கும் நிலைமை இருந்தது. தமிழக முதல்வர் கடந்த ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட பகுதி களை நேரில் வந்து பார்வையிட்டு, ‘வெள்ள பாதிப்புகள் இனிமேல் ஏற்படா வண்ணம் இருக்க நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று உறுதி அளித்ததோடு நடவடிக்கைகளையும் எடுத்தார்.
அதனால் பாதிப்புகள் குறைந்தன. இருந்தாலும் கூட, இந்த ஆண்டு ஏற்பட்ட கனமழையின் காரணமாக வரதராஜபுரத்தில் சில பகுதிகளில் வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை திருப் பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு. செல்வப்பெருந்தகை நேரில் வந்து பார்வையிட்டு ‘இனிமேல் வெள்ள பாதிப்புகள் ஏற்படாவண்ணம் இருக்க தமிழக அரசிடம் வலியுறுத்துகிறேன்’ என்றார். வரதராஜபுரம் நலமன்ற கூட்ட மைப்பின் சார்பில், வெள்ள பாதிப்பு களை தடுக்க நிரந்தர தீர்வு காண தமிழக அரசை தாங்கள் வலியுறுத்த வேண்டுமெனவும், இது குறித்து தாங்கள் சட்டமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்’ எனவும் கேட்டுக்கொண் டோம்.
செவ்வாயன்று (டிச.10) நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் கு. செல்வப்பெருந்தகை, ‘வரதராஜ புரத்தில் தொடர்ந்து மழைக்காலங் களில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. அதை தடுக்க தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டுமென’ வலியுறுத்தினார். அதற்கு நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் ‘இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பேசியிருக்கிறேன். உரிய நட வடிக்கை எடுக்கப்படும்’ என உறுதி யளித்திருக்கிறார்.
இதற்காக வரதராஜபுரம் நல மன்ற கூட்டமைப்பின் சார்பில் தமிழக முதல்வருக்கும், நீர்வள ஆதாரத் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் வரத ராஜபுரம் மக்களின் குரலை எதி ரொலித்த திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை வரதராஜபுரம் மக்களுக்கு உறுது ணையாக இருந்து வருகிற மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை ஆ. மனோ கரனுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசு சட்டமன்றத்தில் அறி வித்தவாறு வரதராஜபுரத்தில் வெள்ளத் தடுப்பு பணிகளை நிறைவேற்றித் தர வேண்டுமென பகுதி மக்களின் சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கி றோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.