tamilnadu

img

அஞ்சல் பிரிப்பகம் மூடும் உத்தரவை திரும்பப்பெற கோரிக்கை

திருவண்ணாமலை, செப். 7- திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் அஞ்சல் பிரிப்பகம், தொடர்ந்து  திருவண்ணாமலையிலேயே செயல்பட வேண்டும், இந்த அலுவலகம் மூடும் உத்த ரவை திரும்பப்பெற வேண்டும் என, அஞ்சல்  ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில்,  ஒரே  ஒரு அஞ்சல் பிரிப்பகம் மட்டுமே திருவண்ணா மலை நகரில் செயல்பட்டு வருகிறது.   மத்திய  அரசு அலுவலகமான இது, 1982 ஆம் ஆண்டு   முதல் தியாகி அண்ணாமலை நகரில் உள்ள  தலைமை அஞ்சலக கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மாவட்டத்தில் உள்ள சுமார் 250 அஞ்சல கங்களிலிருந்து  பெறப்படும், அனைத்து வகை  தபால்களும் இங்கு பிரிக்கப்படுகிறது.  தற்போது திருவண்ணாமலையில் செயல் பட்டு வரும், இந்த அஞ்சல் பிரிப்பகத்தை மூடி விட, தபால்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்  படுகிறது. இந்த அலுவலகத்தை விழுப்புரம்  மாவட்ட தலைநகரோடு இணைத்திட அஞ்சல் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள் ளது.  இந்த அலுவலகத்தை மூடிவிட்டால், பொது மக்கள் இந்த சேவைகளை பெற விழுப்புரம் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும்.  சுமார் 1200 ச.கி.மீ பரப்பளவு கொண்ட இந்த  மாவட்டத்தில் சுமார் 3 கோடி மக்கள் வசித்து  வருகின்றனர். ஒரு பாராளுமன்ற உறுப்பி னர் 8 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட  மிகப்பெரிய மாவட்டத்தின்  தலைநகரான திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்  பட்டுவரும் ஒரேஒரு அஞ்சல் பிரிப்பகத்தை யும் மூடிவிட்டால், பொதுமக்களின் தபால் கள் செல்ல காலதாமதம் ஏற்படும். மற்றும்  அவசர தேவைக்கு நெடுந்தூரம் பயணம்  செய்ய வேண்டி இருக்கும். இதனால்,  நேர  விரயம் ஏற்படும். மேலும், மாணவர்களுக்கும்,  வேலைக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்க ளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று திரு வண்ணாமலை மாவட்ட மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அஞ்சல் பிரிப்பகம் தொடர்ந்து செயல்பட வேண்டம் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதே கோரிக்கையை அகில இந்திய  அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில்  ஊழியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி கோட்டத்  தலைவர்கள் பி.குணசேகரன், கே.அன்பழ கன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில  செயலாளர்கள் கே.சங்கரன், பி.பரந்தாமன், கோட்ட செயலாளர்கள் டி.குணசேகரன், டி.பி. ரமேஷ், சிபிஎம் மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார், ஆயுள் காப்பீட்டு கழக ஊழியர்  சங்க நிர்வாகி முத்துக்குமார் உள்ளிட்ட பலர்  பேசினர்.