tamilnadu

img

ரயில்வே சுரங்கப்பாதை கலாநிதி வீராசாமியிடம் கோரிக்கை மனு

சென்னை, நவ.13- வட சென்னை மாவட்டம் எர்ணாவூர் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும், விம்கோ ரயில் நிலையத்தி லிருந்து எர்ணாவூர் பாலாஜி நகர் வரை ஐ.டி.சி ஓரமாக நடைபாதை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  நவம்பர் 8 ஆம் தேதி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திங்களன்று (நவ.11) வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீரா சாமியை சந்தித்து கையெழுத்து இயக்க படிவத்தையும், கோரிக்கை மனுவையும் வழங்கினர். மனுவைப் பெற்றுக் கொண்ட மக்களவை உறுப்பினர் கலாநிதி வீரா சாமி டிசம்பர் 13 ஆம் தேதி ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பது மற்றும் நடை பாதை குறித்து ஆய்வு செய்து ரயில்வே அதிகாரி களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பில் சிபிஎம் முன்னாள் நகரமன்றத் தலைவர் ஆர்.ஜெயராமன்,  பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், கே.ஆர்.முத்து சாமி, மாதர் சங்கம் மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியம்,  பகுதிக்குழு உறுப்பினர்கள் கே.வெங்கட்டையா, ஆர்.கருணாநிதி, கே.கே.புஷ்பா, கிளைச் செயலாளர் டி. ஆறு முகம், திமுக  4 வது வட்டம் மகளிர் அணி அமைப்பாளர்  பூங்கொடி, செந்தில் பிரபா (வாலிபர் சங்கம்)  ஆகி யோர்  கலந்து கொண்டனர்.