சென்னையில் உள்ளாட்சி ஊழியர்கள் போராட்டம் சென்னை, ஆக. 27 - துப்புரவு மற்றும் இதர பணிகளை தனியார் மயமாக்கும் அரசாணைகளை ரத்து செய்யக் கோரி, செவ்வாயன்று (ஆக.27) சென்னையில் உள்ளாட்சி ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினர்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சிகளில் நிரந்தர துப்புரவுப் பணி மற்றும் இதர பணிகளை தனியார்மயமாக்க 152, 139, 115, 10 ஆகிய நான்கு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றைத் திரும்ப பெற வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அனைத்துப் பிரிவு தொழி லாளர்களையும் தேர்தல் கால வாக்குறுதிப்படி நிரந்தரம் செய்ய வேண்டும்.
அரசாணை (2டி) 162-ன் படி மாநகராட்சி, நக ராட்சி பேரூராட்சி அனைத்து பிரிவு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்க கோரிய வழக்கில், உயர் நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வுக்கேற்ப ஆண்டுதோறும் அகவிலைப் படியுடன் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் 2022 மற்றும் அதன் விதிகள் 2023 ஆகியவற்றை திருத்தம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.
முன் களப் பணியாளர் களுக்கு அறிவித்த 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சம்மேளனம் இந்த போராட்டத்தை நடத்தியது. சம்மேளனத் தலைவர் கே.ஆர். கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத் தில், சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன், சம்மேளன பொதுச் செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியன், பொருளாளர் கே. ரங்க ராஜ், மாநிலச் செயலாளர்கள் பி. சீனிவாசலு, ஏ.ஜி. சந்தானம், உதவித் தலைவர்கள் மணி மாறன், ரத்தினகுமார், சென்னை மாநகராட்சி செங்கொடி சங்க நிர்வாகிகள் முனு சாமி, ராஜன் உள்ளிட்டோர் பேசினர். இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாக இயக்குநர், பேரூ ராட்சிகள் இயக்குநர் ஆகியோரை சந்தித்தும், சங்க நிர்வாகிகள் மனு அளித்து பேசினர்.