tamilnadu

பணிக்காக சென்னை வருவோருக்கு வாடகை வீடு சேவை துவக்கம்

சென்னை, ஏப். 3

வெளியூர்களில் இருந்து சென்னைக்கு பணிநிமித்தம் மாறுதாலாகி வருபவர்கள் மற்றும் சென்னையில் வேலைக்காக வரும் தகவல்தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறையினர் எந்தவித சிரமமும் இல்லாமல் வாடகை வீடுகளை பெற நெஸ்ட் அவே டெக்னாலிஜிஸ் சேவையாற்றுகிறது.இது வீட்டின் உரிமையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே ஒரு இணைப்புபாலமாக திகழ்கிறது. வீட்டு உரிமையாளர்களுக்கு நல்ல வாடகைதாரரை அடையாளம்காட்டுவதோடு உரிமையாளர்களுக்கும் தொடர்ந்து வீடு வாடகை கிடைப்பதை உறுதி செய்கிறது என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நெஸ்ட் அவே வர்த்தக பிரிவின் முதுநிலை துணைத்தலைவர் இஸ்மாயில் கான் கூறினார். தற்போது சென்னையில் 100 வீடுகளையும் 180 வாடகை தாரர்களையும் கொண்டுள்ள இந்த நிறுவனம் இந்தாண்டு இறுதிக்குள் 500 குடும்பங்களுக்கான இல்லங்களை இத்தளத்தில் இணைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியா முழுவதும் தற்போது இது 60,000 வாடகைதாரர்களையும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளையும் தங்களது வலையமைப்பில் இது கொண்டுள்ளது. 

;