திருவண்ணாமலை, மே 29- செண்பகத்தோப்பு அணையில் ரூ.16.37 கோடி மதிப்பீட்டில் புதிய ரேடியல் ஷட்டர்கள் பொருத்தும் பணி களை மாவட்ட ஆட்சித் தலை வர் க.சு.கந்தசாமி பார்வை யிட்டார். திருவண்ணாமலை மாவட்டம் போளுர் வட்டம் செண்பகத்தோப்பு கிரா மத்தில் அமைந்துள்ளது செண்பகத்தோப்பு அணை. இந்த அணை கட்டுவதற்கான பணிகள் 2001ஆம் ஆண்டு துவக்கப்பட்டு, 2007இல் முடிக்கப்பட்டது. செண்ப கத்தோப்பு அணை கட்டும் போது பொருத்தப்பட்ட ரேடியல் ஷட்டர்கள் சரியாக இயங்காததால், முழு அளவு தண்ணீரை சேமிக்க முடியா மல் போனது. இதையடுத்து அணையை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் செண்பகத்தோப்பு பாசன விவசாயிகள் பலகட்ட போரட்டங்களை நடத்தி வந்தனர். இதையடுத்து முதல மைச்சர் செண்பகத்தோப்பு அணையின் ரேடியல் ஷட்டர்களை புதிதாக பொருத்துவதற்கு ரூ.16.37 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். கடந்த ஜன வரி மாதம் முதல் அணையின் ரேடியல் ஷட்டர்கள் புதிதாக மாற்றும் பணிகள் துவங்கப் பட்டு நடைபெற்று வந்தது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவா மல் தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்ப டுத்தப்பட்டுள்ள தால், அணையின் ஷட்டர்கள் சீர மைக்கும் பணிகள் தற்காலி கமாக நிறுத்தப்பட்டன. அரசு சில தளர்வுகளை அறிவித்து குறைந்த பணி யாளர்களுடன் மேற்கண்ட பணிகளை மேற்கொள்வ தற்கு அனுமதி அளித்ததன் அடிப்படையில், அணையின் ஷட்டர்கள் மாற்றும் பணி கடந்த 6ஆம் தேதி முதல் 12 பணியாளர்களுடந் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் வரும் ஜுலை மாதம் இறுதிக்குள் முடிப்ப தற்கான அனைத்து நடவ டிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பணிகள் முழுமையாக முடிந்தவுடன் அணையின் முழு அளவு (62.00 அடி) தண்ணீர் சேமிக்கப்படும். இதன் மூலம் போளுர், ஆரணி, வந்தவாசி, செய் யாறு மற்றும் ஆற்காடு வட்டங்களில் உள்ள 48 ஏரிகளின் மொத்த ஆயக் கட்டுகள் 7,497 ஏக்கர் பாசன வசதி பெறும்.சமீபத்தில் நிறைவடைந்த சட்டமன்ற கூட்டத் தொடரின் மானியக் கோரிக்கையின் போது முதல்வர் செண்பகத்தோப்பு அணையின் கரை, வடி கால், சாலை, பணியாளர் குடி யிருப்பு, ஆய்வு மாளிகை, அணைக்கட்டுகள், பொதுமக்களின் அடிப் படை வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்கா ஆகிய பணிகள் ரூ.14.25 கோடி மதிப்பீட்டில் மேற் கொள்ளப்படும் என அறி வித்தார். இப்பணிகள் மேற்கொள்வதற்கான அர சாணை பிறப்பித்தவுடன் ஒப்பந்தப்புள்ளி கோரப் பட்டு விரைவில் பணிகள் ஆரம்பிப்பதற்கான நடவ டிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின்போது, பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் பொறி. ஏ. மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் (ஆரணி உபகோட்டம்) பொறி. ஏ. அறிவழகன், உதவி பொறியாளர் (போளுர் பாசன பிரிவு) பொறி. இரா. சிவகுமார், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பாசனதாரர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.