சென்னை,ஏப்.28- சொந்த வாகனங்களில் இடம்பெற்றிருக்கும் அரசு முத்திரை, கட்சி சின்னம் போன்ற வற்றை மே 1-ம் தேதிக்குள் நீக்கா விட்டால் நடவடிக்கை எடுக்கப் படும் எனசென்னை போக்கு வரத்து காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளி யிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: சொந்த வாகனங்க ளின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக் கர்கள் அல்லது வேறு ஏதேனும் சின்னங்கள் வடிவில் தங்களது துறை அடையாளங்களை வெளிப்படுத்துவது, தனி நபர்க ளுக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும், சென்னையில் உள்ள தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச் செயலகம், டிஎன்இபி, ஜிசிசி, காவல்துறை, முப்படை போன்ற துறைகள் அல்லது நிறுவனங்களின் பெயர்களைக் காணலாம். இது போன்ற ஸ்டிக்கர்கள் நம்பர் பிளேட்டிலும், வேறு பகுதி யிலும் காணப்படும். இத்தகைய ஸ்டிக்கர்களை குற்றம் சாட்டப்பட்ட சிலர், தங்களது வாகனத்தில் தவறாகப் பயன் படுத்தி, காவல்துறையின் கடு மையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வருகின்றனர். இது தவிர, பல தனியார் வாக னங்களில் ஒருசில அரசியல் கட்சியை சித்தரிக்கும் சின் கங்கள், மருத்துவர் அல்லது வழக்கறிஞர் என வெளிப்படுத் துவதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற எழுத்து, முத்திரை, சின்னம் போன்ற வற்றை வாகனத்தில் இருந்து நீக்க மே 1 ஆம் தேதிவரை அவகாசம் வழங்கப்படுகிறது. இதனை மீறுவோர் மீது, மே 2 ஆம் தேதி முதல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வழக்குகள் பதிவு செய்யப் படும். நம்பர் பிளேட்டில் அங்கீ கரிக்கப்படாத ஸ்டிக்கர்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.