விழுப்புரம், நவ. 22- விழுப்புரத்தில் காந்தியின் 150வது பிறந்த நாள் மத நல்லிணக்க கருத்தரங்கம் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க விழுப்புரம் மாவட்டக்குழுவின் சார்பில் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் ஆ.பொன்முடி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கு.ஐயா;ககண்ணு வரவேற்றார். பாரதி சிந்தனைப்புலம் இரா.ராமமூர்த்தி தொடக்க உரையாற்றினார். மாநிலச் செயலாளர் ஆ. பக்கிரிசாமி, வரலாற்று ஆசிரியர் அருள் நாதன்தங்கராஜ், அப்துல் அஜிஸ் பள்ளி வாசல் எஸ்.ஏ.தாஜீதீன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பி னர் பேராசிரியர் ப.செல்வகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கருத்த ரங்கில் மாவட்ட துணைத் தலைவர்கள் பி. இராமலிங்கம், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் எஸ்.ரத்தினம் நன்றி கூறினார்.