ராணிப்பேட்டை, டிச. 5 – பெஞ்சல் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பாக ரூ.21.13 லட்சம் மதிப்பீட்டில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் துணிகளை லாரி மூலம் வியாழனன்று (டிச.5) விழுப்புரம் மாவட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
இதில் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், வட்டாட்சியர்கள் ஜெயக்குமார், அருள்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.