சென்னை,மார்ச் 1- மதவாத வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள தில்லி மக்க ளுக்கு நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்று உழைக்கும் மக்களுக்கு சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் ஜனநாயக வழியில் அமைதியான முறையில் மக்கள் போராடி வருகின்றனர். போராடும் மாணவர்கள், பொதுமக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடும், சங் பரிவாரக் கும்பல் கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய சம்பவங்களில் நாடு முழுவதும் 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைநகர் தில்லியில் ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலின் திட்டமிடப்பட்ட கொடூரமான வகுப்புவாத வன்முறையில் 44-க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்தது, வீடுகளின் சொத்துக் கள் மற்றும் வடகிழக்கு தில்லியில் வாழ்வாதாரங்களை விரிவாக அழித்தது. பாதிக்கப்பட்டவர்க ளில் பெரும்பாலோர் அமைப்பு சாரா துறை தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இரு சமூகங்களைச் சேர்ந்த குறைந்த நடுத்தர வர்க்க குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு முகாம்க ளில் தங்கியிருக்கிறார்கள். தற்போதும் மக்கள் மத்தியில் அச்சம் மற்றும் அவநம்பிக்கை நிறைந்த சூழல் நிலவுகிறது. வீடுகளை இழந்து, உடமை களை இழந்து பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளை சிஐடியு வின் தில்லி மாநிலக்குழு அமைதி குழுக்களை அமைத்து வருகிறது. இந்த நிவாரண நிதிக்கு தாராளமாக பங்களிக்க தமிழகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களுக்கு சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு வேண்டுகோள் விடுக்கிறது. சிஐடியு மாவட்டக்குழுக்கள், மாநில சங்கங்கள், சம்மேள னங்கள், இணைக்கப்பட்ட சங்கங்கள் என அனைத்து அமைப்புகளும் மார்ச் 5 ஆம் தேதிக்குள் சிஐடியு மாநில மையத்திற்கு நிவாரண நிதியை அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.