tamilnadu

img

தமிழகத்தில் மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகளில் தளர்வு – மின்சார வாரியம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகளில் தளர்வு என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மின்சார வாரியமான tangedco வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தமிழ்நாட்டு மக்களுக்கு நற்செய்தி, தமிழக அரசின் புதிய ஆணைப்படி கீழ்காணும் கட்டிடங்களுக்கு, மின் இணைப்பு பெற ‘கட்டிட நிறைவு சான்றிதழ்’ தேவை இல்லை.

  1.  14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை.
  2. 750 சதுர மீட்டர் பரப்பளவிற்குட்பட்ட வீடுகளுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை.
  3. 14 மீட்டர் உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவிற்குட்பட்ட வணிக கட்டிடங்ககளுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை.
  4. அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை.

இன்றே விண்ணப்பியுங்கள்!!
https://tangedco.org/en/tangedco/online-services/onlinesernew/