சென்னை,அக்.13- வடகிழக்கு பருவமழை பொதுவாக அக்டோபர் 20 ஆம் தேதிகளில் தொடங் கும் நிலையில், இம்முறை 5 நாட்கள் முன் பாக தொடங்கி இருப்பதாக கூறப்ப்பட்டுள்ளது. இதனால் வட தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திரா பகுதிகளில் அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பருவமழை தொடங்கும் என்றும் அடுத்த நாட்களில் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல மேடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தஞ்சை, திருவாரூர், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றார்.
வட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
திருவள்ளூர், காஞ்சிபுரம். ராணிப்பேட்டை, செங்கல்பட்டில் அக்டோபர் 14 அன்று கனமழை பெய்யும் என்றும் அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம்,வேலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்றும் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் கேள்விக்கு ஒன்றுக்கு பதில் அளித்த பாலச்சந்திரன், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 13 வரை 95.3 மி.மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. மழை தொடர்பான அனைத்து தகவல்களும் அரசுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மழை தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம் என்றும் கூறினார்.