சென்னை,ஜூலை 7- மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்களாக உள்ள 6 பேர் பதவிக் காலம் வருகிற 24 ஆம் தேதியு டன் முடிவடைகிறது. இதையடுத்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 18 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டமன்ற எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்ய வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை யின் அடிப்படையில் அதிமுக கூட்டணிக்கு 3 எம்.பி.க்களையும் திமுக கூட்டணி 3 எம்.பி.க்களையும் தேர்வு செய்ய முடியும். திமுக வேட்பாளர்களாக தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோரும் கூட்டணி கட்சியான மதிமுக சார்பில் பொதுச் செயலாளர் வைகோவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டனர். அதிமுக வேட்பாளராக சிறுபான்மை யினர் நலப்பிரிவு இணைச்செயலாளரான வேலூரை சேர்ந்த முகமது ஜான் (முன்னாள் அமைச்சர்), மேட்டூர் நகரச் செயலா ளர் சந்திரசேகரன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள் ளனர். பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் பேட்டி யிடுகிறார். இவர்கள் 3 பேரும் திங்களன்று (ஜூலை 8) மனுத்தாக்கல் செய்கின்றனர். இம் மனுக்களின் பரிசீலனை 9 ஆம் தேதி நடைபெறுகிறது. மனுக்களை திரும்ப பெற 11 ஆம்தேதி கடைசி நாளாகும். தற்போதைய நிலவரப்படி வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்பட 6 பேரும் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு செய்யப்படு கின்றனர். சுயேட்சைகளின் மனுக்கள் 9 ஆம் தேதி தள்ளுபடி செய்யப் படும்.