tamilnadu

img

12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை, மே 7- வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேல டுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு  தமிழகத்தில் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், கரூர், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும்  தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்க ளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. குமரிக்கடல் மற்றும் மாலத்தீவை ஒட்டிய பகுதி களில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வரை  வேகத்தில் வீசக் கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

;