“பாஜகவுக்கு 220 இடங்களில் தான் வெற்றி கிடைக்கும் என்று நான் கணித்தேன். இந்த கணிப்பு என்பது சரியாகி உள்ளது. பாஜக 237 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. நான் சொன்ன ஆலோசனைகளை பாஜக பின்பற்றி இருந்தால் பாஜக 300 தொகுதிகளில் வென்று இருக்கலாம். ஆனால் துரதிஷ்டவசமாக மோடியின் சர்வாதிகார மனநிலை பாஜகவை படுகுழிக்குள் தள்ளிவிட்டது. இப்போதாவது அவர் தனது மனநிலையில் இருந்து வெளியேறி வர வேண்டும்’’ என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.