அல்சைமர் எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஆண்டுதோறும் போரம் பர்பிள் ரன் நடத்தப்படுகிறது. 3வது ஆண்டாக சென்னை பெசன்ட் நகரில் நடத்தப்பட்ட ஓட்டத்தில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஓட்டம் மூலமாக வசூலாகும் தொகை பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பு அறிவியல் நிலையத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.