tamilnadu

புதுச்சேரி மற்றும் கிருஷ்ணகிரி முக்கிய செய்திகள்

புதுவையில் மஞ்சள்நிற அட்டைக்கும் இலவச அரிசி

புதுச்சேரி, மே 25- புதுவையில் மஞ்சள்நிற அட்டைக்கும் 3 மாதம் இலவச அரிசி வழங்க துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மத்திய  அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு  9 ஆயிரம் மேட்ரிக் டன் அரி, பருப்பு ஆகியவற்றை புதுச்சேரிக்கு வழங்கியது. இந்த அரிசியை சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கவும் மத்திய அரசு உத்தரவிட்டது. பேரிடர் நேரத்தில் இது போன்று மக்களை பிரித்து பார்க்கக் கூடாது, மஞ்சள்நிற அட்டை தாரர்களுக்கும் இலவச  அரிசி வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்  சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப் பட்டன. இந்த கோரிக்கையை ஏற்று மாநில  காங்கிரஸ் அரசு மஞ்சள் நிற அட்டைதாரர்க ளுக்கும் அரிசி வழங்க முடிவு செய்து அதற்கான கோப்பை துணைநிலை ஆளு நருக்கு அனுப்பியது. ஆளுநர் அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, ஏற்கனவே அரி சிக்கு பதில் பணம்தானே வழங்கப்படுகிறது. எனவே பணமே வழங்கலாம் என்று தனது கருத்தை ஆளுநர் தெரிவித்தார். இதையடுத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாதர் அமைப்புகள் அரிசியே வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர், மீண்டும் அரசிடம் அரிசியே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

ஆளுநர் பணிந்தார்

சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு வழங்கி  வந்தது போல், மஞ்சள் நிற அட்டைதாரர்க ளுக்கும் மாதம் 10 கிலோ அரிசி வீதம்  3 மாதங்க ளுக்கு 30 கிலோ அரிசி வழங்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து இன்னும் சில நாட்களில் மஞ்சள்நிற அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்கப்பட உள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தி னர் பணத்திற்கு பதில் அரிசி வழங்க வேண்டும்  என தொடர்ந்து வலியுறுத்தி வந்ததின் விளை வாகவும், போரட்டத்தில் ஈடுபட்டதின் விளை வாகவும் 3 மாதத்திற்கு அரிசி வழங்கப்படு வது குறிப்பிடத்தக்கது.
 

கிருஷ்ணகிரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று

கிருஷ்ணகிரி, மே 25- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குந்தாரப்பள்ளி அருகே உள்ள பந்தாராபள்ளியை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவருக்கும், ஊத்தங்கரை அடுத்த வன்னம்பள்ளியை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று  எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. அதில் 20 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 4 பேர் மட்டுமே  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலி எண்ணில் இயங்கிய 2 லாரிகள் பறிமுதல் 

 வேலூர், 25- வாணியம்பாடி அருகே  போலியான பதிவு எண்ணுடன் சிமெண்ட் லோடு  ஏற்றி வந்த 2 லாரிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். ஓட்டுநர்களையும் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புலவர்பள்ளி பகுதியில் ஆலங்காயம் காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமையில்  காவல் துறையினர் வாகன சோதனையில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சிமெண்ட் லோடு  ஏற்றி வந்த 2 லாரிகளை  மடக்கி சோதனை செய்த போது ஆவணங்களில் உள்ள வாகன எண்ணும்,  லாரியில் உள்ள  எண்ணும் வெவ்வேறாக இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் 2 லாரிகளையும் பறிமுதல் செய்து, ஓட்டுநர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில்  லாரி ஓட்டுநர்கள் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரனேஷ், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வைரப்பெருமாள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்களிடம்  மேற்கொண்ட விசாரணையில் 10க்கும்  மேற்பட்ட போலி பதிவு எண்கள் கொண்ட லாரிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படுவதும் தெரிய வந்தது. மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய சாலை வரி, காப்பீட்டுத் தொகை, வாகன தகுதி சான்று உள்ளிட்டவைகளுக்கான கட்டணங்களை செலுத்தாமல்  ஏமாற்ரி வந்ததும் தெரிய வந்துள்ளது.  இதையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநர்கள் இருவரையும் கைது செய்தநர். மேலும் திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாரை பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் வேல்முருகனை தேடி  வருகின்றனர். இந்த போலி பதிவு எண் கொண்ட லாரிகள் மூலம் ஏதாவது சமூக விரோத செயல்களில் லாரி உரிமையாளர் ஈடுபட்டுள்ளாரா  என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.