தமிழில் வெளியிடப்பட்ட 100 சட்ட புத்தகங்கள்
சென்னை, ஜூலை 2- கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தால் 100 சட்டங்களை புத்தக வடிவில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தமிழில் மொழிபெயர்க்கப் பட்ட 37 மத்திய சட்டங்கள் மற்றும் 63 தமிழ்நாடு சட்டங்களில், 43 மறுமதிப்பு செய்யப்பட்ட சட்டங்கள், 20 புதிய பதிப்பு செய்யப்பட்ட சட்டங்கள் என மொத்தம் 100 சட்டப் புத்தகங்கள் பதிப் பிக்கப்பட்டன.
இந்த புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயல கத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சட்ட புத்த கங்களை வெளியிட்டார். நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலை மை செயலாளர் சிவதாஸ் மீனா ஆகி யோர் கலந்து கொண்டனர்.
அரசு கல்லூரிகளில் சேரமீண்டும் வாய்ப்பு!
சென்னை, ஜூலை 2- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில விண்ணப்பிக்கத் தவ றியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க அவ காசம் நீட்டிக்கப்பட் டுள்ளது. இதன்படி, ஜூலை 3 முதல் ஐந்தாம் தேதி வரை இணையதளத் தில் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு ஜூலை 8 முதல் மாணவர் சேர்க்கை நடை பெறும்.
ஒரு பாடப்பிரிவில் சேர்ந்த மாண வர்கள் வேறொரு பாடப்பிரிவில் மாற விரும்பினால், அந்தத் துறையில் காலி யிடம் இருப்பின் அவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்; துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்; ஏற்கனவே விண்ணப்பித்து சேர்க்கை பெற்று துறையில் இணை யாத மாணவர்களின் இடங்களையும் நிரப்ப வேண்டும் என்று கல்லூரி முதல் வர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரை, கோவை மெட்ரோ ரயில்
ஆசிய வங்கி குழு இன்று முதல் ஆய்வு
சென்னை, ஜூலை 2- சென்னை மெட்ரோ ரயில் சேவை யைத் தொடர்ந்து கோவை, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க தமிழ்நாடு அரசு ஆயத்தமாகி வருகிறது. ரூ.11 ஆயிரத்து 368 கோடியில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கி.மீ. தொலைவுக்கு மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
அதேபோல் கோவையில் முதற்கட்ட மாக அவிநாசி சாலை, சத்தி சாலை ஆகிய 2 வழித்தடங்களில் மொத்தம் 38 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ. 10 ஆயிரத்து 740 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில் மெட்ரோ ரயில் திட் டத்துக்கான நிதியை கடனாக வழங்க உள்ள பன்னாட்டு ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் குழு, புதன்கிழமை (ஜூலை 3) மதுரையிலும், வியாழக்கிழமை (ஜூலை 4) கோவையிலும், மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ள வழித்தடங்க ளில் கள ஆய்வு மேற்கொள்கின்றனர்.
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு
சென்னை, ஜூலை 2- ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட சிவில் சர்வீ சஸ் பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 16 அன்று நாடு முழுவதும் 79 நகரங்களிலும், தமிழ்நாட்டை பொறுத்த வரையில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய 5 நகரங்களிலும் நடைபெற்றது. 1,056 பணியிடங்களுக் கான இந்த தேர்வை, சுமார் 6 லட்சத் துக்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர்.
இந்நிலையில், திங்களன்று இரவு முதல்நிலைத் தேர்வு முடிவை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. முடிவுகளை https://upsc.gov.in என்ற இணையதளத் தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
முதல்நிலைத் தேர்வு எழுதிய சென்னை மனிதநேயம் பயிற்சி மையத் தில் படித்த 42 பேர் வெற்றி பெற்று இருப்ப தாக பெருநகர சென்னை மாநகராட்சி யின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமி தெரிவித்திருக்கிறார்.
சிறைத்துறை பணி நியமன ஆணைகள்
சென்னை, ஜூலை 2 - சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணி கள் துறைக்கு, தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் மூலம் 5 சிறை அலுவலர்கள் மற்றும் 44 உதவி சிறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர்களுக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாயன்று நடைபெற்ற நிகழ்ச்சி யில் முதல்வர் மு.க. ஸ்டாலின், பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ். ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சிறைகள் மற்றும் சீர்திருத் தப் பணிகள் துறை தலைமை இயக்கு நர் மகேஷ்வர் தயாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.