அடுக்குமாடி குடியிருப்பு: அரசாணை வெளியீடு
சென்னை,செப்.28- அடுக்குமாடி குடியிருப்பு உரிமையா ளர்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை வகுத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வீடு வாங்கிய குறிப்பிட்ட மாதத்தில் சொசைட்டி, சங்கம் நிறுவி பதிவு செய்ய வேண்டும். சங்க துணை விதிகளை உரு வாக்க வேண்டும்; சங்கத்தை உருவாக்க குறைந்தபட்சம் 4 உரிமையாளர்கள் இருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஒவ்வொன்றும் நிர்வாக குழுவை நியமிக்க வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 மாதங்களில் 2 ஆயிரம் மெகாவாட் நீர் மின்சாரம் உற்பத்திசெய்து சாதனை!
சென்னை,செப்.28- கடந்த ஆறு மாதங்களில் 2 ஆயிரம் மெகாவாட் நீர் மின்சாரம் உற்பத்தி செய்து தமிழ்நாடு சாதனை படைத்துள் ளது. இதுகுறித்து, தமிழ்நாடு பசுமை எரி சக்தி கழக உயர் அதிகாரிகள் கூறுகையில், அணைகளில் உள்ள நீர் இருப்பை பொறுத்து நீர்மின் உற்பத்தி மேற் கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 2,009 மெகா வாட் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது. இதன்மூலம், 50 விழுக்காடு மின் உற்பத்தி இலக்கை அடைந்து விட்டோம். தென்மேற்கு பருவமழை நன் றாக பெய்ததால் இந்த இலக்கை எட்ட முடிந்தது.குந்தா, காடம்பாறை, திரு நெல்வேலி, ஈரோடு ஆகிய 4 முக்கிய மின் உற்பத்தி வட்டங்களில் 2,321.90 மெகாவாட் மின் உற்பத்தி திறன் நிறுவப்பட்டுள்ளது. இதிலிருந்து தினசரி 7 மில்லியன் யூனிட் முதல் 10 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர் இருப்பு போதுமான அளவுக்கு உள்ளது என்று தெரிவித்தனர்.
கரூர், திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா முதல் கட்டப் பணி தொடக்கம்
சென்னை,செப்.28- தமிழ்நாட்டின் முதல் டைடல் பூங்கா, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி யில் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர், தகவல் தொழில்நுட்பத் துறையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, கரூர் மற்றும் திரு வண்ணாமலை மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வரைபட தயாரிப்பு மற்றும் திட்ட மேலாண்மை பணிக்கு ஆலோசகர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது,
பாப்பம்மாள் மறைவு : qமுதலமைச்சர் இரங்கல்
சென்னை,செப்.28- கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பாப்பம்மாள் என்பவர் வேளாண் துறையில் முன்னோடியாகக் கருதப்படு கிறார். பெரியார் விருது பெற்ற இவர் விவசாயத் துறை யில் ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளார். அவரின் சாதனைகளை பாராட்டி கடந்த 2021 ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது ஒன்றிய அரசு வழங்கி கவுரவித்தது. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக, பாப்பம்மாள் செப்டம்பர் 27 இரவு 8.30 மணிக்கு காலமானார்.
அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், “கழக முன்னோடியும், கடந்த 17-ஆம் நாள் நடை பெற்ற முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்றவரு மான பாப்பம்மாள் அவர்கள் 108 அகவையில் மறை வெய்தினார் என்ற துயரச் செய்தி அறிந்து கலங்கி னேன். கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் தன்னை இயக்கத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றி யவர்.1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தித் திணிப்பு க்கு எதிரான போராட்டம் தொடங்கி, தமிழ்நாட்டு மாண வர்களின் நலன் காக்க நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வரை அத்தனை போராட்டக்களங்களையும் நெஞ்சு ரத்தோடு எதிர் கொண்டவர் அவர்.
1959 ஆம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாப்பம்மாள், 1964-இல் காரமடை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராகவும், பின்னர் தேக்கம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவ ராகவும் பொறுப்பேற்று பணியாற்றினார். அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.